,

காட்டாளி

300.00

- +

நாவல் என்னும் வகைமை சார்ந்த இலக்கியம் பலவிதங்களில் இன்று ஆளப்படுகிறது. மிகப்பெரிய ‘மெகா’ நாவல்களின் காலமாக இது இருந்து வருகிறது. ஒரே ஒரு முடிச்சு வைத்து அதைக் கூறுவதாக இருப்பது சிறுகதை என்றும் பல முடிச்சுகள் கொண்டது நாவல் என்றும் முன்பு கூறினார்கள். இவற்றில் கூட முடிச்சை அவிழ்த்துக் காட்டி அதற்கு ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும் என்றும், வேண்டாம், வேண்டாம் வாசகனே முடிச்சை அவிழ்த்துப் பார்க்கட்டும் என்றும் இரு வேறு கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால் இக்கருத்துகள் இப்போது மாறிவிட்டன. முடிச்சுகளே இல்லாத சிறுகதைகளும் நாவல்களும் வருகின்றன. அவை வெறும் நிகழ்ச்சிகளை மட்டும் காட்டி விட்டுச் செல்கின்றன. எந்த ஒரு தனி பாத்திரப் படைப்பையும் மையப்படுத்தாமல் பின்நவீனத்துவ சாயல் கொண்டதாக எல்லாவற்றையும் கட்டுடைத்துப் பல நாவல்களும் வருகின்றன. நிகழ்கின்ற சம்பவங்களைக் காட்டி வாசகனை முடிவெடுக்கச் சொல்லும் நாவல்கள்தான் நவீன இலக்கியத்தில் பெரும்பானவை என்று கூடச் சொல்லலாம்.

இந்தச் சூழ்நிலையில் இரவீந்திரபாரதியின் “காட்டாளி” எனும் நாவல் வந்துள்ளது. முழுக்க முழுக்கக் கிராமத்தில் நடக்கும் இந்நாவலில் மண் வாசனை சற்று அதிகமாகவே வீசுகிறது. கிராமத்தில் புழங்கும் யதார்த்தமான மொழியும் சொலவடைகளும் சற்றுத் தாராளமாகவே விரவிக் காணப்படுகின்றன. இந்நாவல் காட்டும் மனிதர்கள் எல்லாருமே வெள்ளந்தியானவர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர்கள். பிறர் மீது அன்பு வைத்து அந்த அன்பைப் பெறுபவர்கள். அவர்களிடையே நிகழும் பல்வேறு சம்பவங்களைப் பின்னித்தான் இந்த நாவலை இரவீந்திரபாரதி படைத்துள்ளார்.

நாவல் நடைபெறும் காலக்கட்டம் ஒரு சில இடங்களில் குறிப்பாக உணர்த்தப்படுகிறது. கிராமங்களுக்கு வானொலிகள் வரும் காலம் அது. தந்தை பெரியார் தமிழகம் முழுதும் சுற்றி வந்து கூட்டங்கள் பேசிய காலம் அது. ஆனால் அப்போது திண்ணைப் பள்ளிகூடங்களைக் காட்டுவது சரியா எனத் தெரியவில்லை. கிராமத்துப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புதல், விதவைத் திருமணம், சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்களையும் மதித்தல் போன்ற எல்லாவற்றையும் இதில் பார்க்க முடிகிறது.

பெரும்பாலும் எல்லாத் திருமணங்களிலும் நாதஸ்வரக்காரர்கள் சாப்பிடச் செல்லும்போது எல்லாமே முடிந்திருக்கும். ஒருசில திருமணங்களில் எதுவும் கூட அவர்களுக்கு இருக்காது. அவர்களால் முதலில் சென்று சாப்பிடவும் முடியாது. கிராமத்து விருந்துகளிலும் பலவிதமான வேலைகள் செய்து கொண்டிருக்கும் நாலாந்தர மக்களிலும் இதைப்பார்க்க முடிகிறது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஓரிடத்தில் குறிப்பாகக் காட்டுகிறது நாவல்.

கிராமத்துத் திருவிழாவில் ஆடுவெட்டி கறி விருந்து பறிமாறப்படுகிறது. அப்போது ”கடசியில தோட்டிங்களுக்கும் கொஞ்சம் குடுங்கப்பா! அவுங்களும் நம்மளோடதான ஓரியாடிக்கிணு கீறாங்க! இனிமேலெல்லாம் நல்ல கறியிலியே கொஞ்சம் அவுங்களுக்கும் பிரிச்சி குடுத்தா என்னா? மாரி இப்படி செஞ்சா பரவாயில்லியா?”

இந்தக் கேள்வியில் இருக்கும் மனிதநேயத்துப் பதில் இப்படி வருகிறது. ஆதிக்கத்திற்குப் பயப்படும் மனம் அதற்குள் மாறிவிடுமா?

“எதுக்கும் ரெண்டொருத்தரக் கேட்டு செஞ்சாப் பரவாயில்ல! முன்ன முன்ன அவுங்களுக்குத்தன் குடுக்கணுமான்ணு ஆளாளுக்கு மொணருவாங்க!

கடைசியில் ஆசிரியர் தீர்வு இப்படி வருகிறது. எதற்கெடுத்தாலும் ஏதாவது சொல்லிக் கொண்டு நல்ல எண்ணங்கள் நிறைவேறாமல் இருக்க சிலர் இருக்கிறார்கள் என்பதைக்காட்ட “அடுத்த தடவ குடுத்துப் பாக்கலாம்; பேசினா பேசிப் போறாங்க! எப்பப் பேசாம கீறாங்க! எத செஞ்சாலும் ஏதாவது பேசிக்கினுதாம் இருப்பாங்க”

அதாவது சில நாம் எடுக்கும் நல்ல முடிவுகளுக்குத் தடங்கல்கள் வரும் . ஆனால் அவற்றை எப்படியும் தீர்க்க வேண்டிய முறையில் தீர்க்க வேண்டும் என்ற திடமான முடிவை எடுக்க வேண்டியதின் அவசியத்தை இப்பகுதி காட்டுகிறது.

Weight 250 g
Dimensions 22 × 14.5 × 10 cm
Scroll to Top